நமது ஊரில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொங்கல் விழாவில் கடைப்பிடித்து வரும் எழுதப்படாத விதிகள் ( விதிகள் என்பதை விட சுயக்கட்டுப்பாடு என்று கூறுவதே சாலப்பொருத்தம், சில நேரங்களில் மீறப்பட்டிருக்கலாம் ஆனால் பாதிப்புகள் இருந்ததில்லை )
குறிப்பு: இவையனைத்தும் நமது ஊர் மக்கள் செயல்பாட்டு நெறியாளர் தெய்வத்திரு.சக்திவேல், ஊரின் நலவிரும்பி , இளைஞர்களின் முன்னோடி தெய்வத்திரு.சமுத்திரராஜ் அவர்களுக்கிடையேயான கடந்த ஆண்டு கலந்துரையாடலின் போது குறிப்பெடுக்கப்பட்டது.
விழாக்குழு:
1.அரசியல் பிரதிநிதிகள் விழாக்குழு உறுப்பினர் ஆகக்கூடாது (ஆகினாலும் விழாவில்/மேடையில் அரசியல் பேசக்கூடாது.
2.மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும்,அனுபவமிக்கவர்களையுமே விழாக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவராக இளைஞர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
3.ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆதரவு பெற்றவரே விழாக்குழுவின் செயலாளராகவும் , பொருளாளராகவும் தலைவரால் முன்மொழியப்படவேண்டும்.
4.ஓன்று (அ) ஒன்றுக்கு மேல் செயலாளர்களை (அதிகபட்சம் 4 பேர் ) தேர்வு செய்யவும் அவர்களின்கீழ் செயல்படவும் இளைஞர்களுக்கு முழு உரிமை உண்டு.
5.விரும்பும் தன்னார்வலர்கள் விழாக்குழுவுடன் இணைந்து பணியாற்ற முழு அனுமதி உண்டு.
6.நன்கொடைகள் அன்பளிப்புகள் பொருளாளரால் முறையாக கணக்கிடப்பட்ட வேண்டும். குளறுபடிகளோ, மக்கள் விரும்பினாலோ அல்லது சந்தேகம் எழும்பினாலோ கணக்கினை மக்களிடம் சமர்பிக்க கடைமையுள்ளவர் பொருளாளர்.
7..ஒலி-ஒளி , மற்றும் பந்தல் அமைப்பினை தேர்வு செய்வதில் விழாக்குழுவிற்கு முழு சுதந்திரம் உண்டு, தேவைப்பட்டால் நாட்டாமையிடம் ஆலோசனை கேட்கலாம்.
8.எந்தவொரு போட்டியினையும் நீக்கவோ, சேர்க்கவோ மாற்றி அமைக்கவோ விழாக்குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.
9. வெற்றி/தோல்வி சர்ச்சைகள் எழும்பட்சத்தில் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.
1௦. சிறப்பு விருந்தினர்களாக காவலர்களை அழைத்துக்கொள்ளவதற்கு நாட்டாமையுடன் விழாக்குழுவினரும் செல்லக்கடமைப்பட்டவர்கள்.
11. விழாக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மதுவருந்திவிட்டு செயல்படுவதாக தெரியவந்தால் அவர்களை நீக்க இளைஞர்களுக்கும், மக்களுக்கும் நேரடி உரிமை உண்டு.
போட்டி விதிகள்:
1.குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் குறைந்தது தலா 3 போட்டிகளாவது நடத்தப்பட வேண்டும்.
2.போட்டி அறிவித்து 5 நிமிடத்தில் இரண்டுக்கும் மேல் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளவில்லையென்றால் அந்த போட்டியை நீக்கவோ (அ) கலந்துகொண்டவர்களையே வெற்றியாளராக அறிவிக்கலாம்.
3.பெண்கள் பிரிவு போட்டிகளில் நமது ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணம் செய்துகொடுக்கப்பட்ட பெண்கள், வெளியூர்களில் இருந்து நமது ஊருக்கு வந்த மருமகள்கள் கலந்துகொள்ள முழு உரிமை உண்டு.
4.ஆண்கள் பிரிவு போட்டிகளில் நமது ஊர் இளைஞர்களும், நமது ஊர் மருமகன்களும்( நமது ஊருக்கு வரி கொடுப்பவராக இருக்க வேண்டும்) கலந்து கொள்ளலாம்.
5.குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள் பிரிவுகளில் மக்களுக்கு ஆட்சேபனைகளோ மனத்தாங்கலோ இல்லையென்றால் நமது வெளியூர் சொந்தங்களும் கலந்துகொள்ளலாம்.
6.பாட்டுப்போட்டிகளில் சினிமா பாடல்கள்/கட்சிப்பாடல்கள் அறவே கூடாது, ஜாதிப்பாடல்கள் தவிர்ப்பது நல்லது.
7.போட்டிகள் நடைபெறும் நேரத்தை சூழ்நிலைகளுக்கு தக்கவாறு மாற்றி அமைக்கலாம்.
8.எந்த போட்டிக்கும் பரிசு வழங்க விரும்புபவர்கள் அந்த போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே விழாக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
9.பரிசு வழங்குபவர்கள் தங்களுக்குள்ளான பரஸ்பர புரிதலுடன் போட்டிகளை மாற்றி பரிசுகளை வாங்கி வழங்கலாம்.
10.ஏதாவதொரு போட்டிக்கு பரிசு வழங்க பொறுப்பேற்றுவிட்டு கடைசி நேரத்தில் விலகுவது அறம்மல்ல, அவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலை சந்தர்ப்பதால் ஏற்படுமாயின் இரவு நிகழ்ச்சிக்கு 2 மணி நேரம் முன்னதாகவே விழாக்குழுவிடம் தெரிவிப்பது நலம்.
11. பெண்கள் சம்பந்தப்பட்ட போட்டிகளை சிறப்புடன் செயல்படுத்த பெண்களின் சார்பாக பெண் தன்னார்வலர்கள் விழக்குழுவுடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பாய் அமையும்.
பொது விதிகள் :
1.இளைஞர்களின் சம்மதங்களை ஏகமனதாக பெற்றவரே செயலாளராக செயல்படுவர், ஆதலால்தான் செயலாளரின் கருத்துக்கு இளைஞர்கள் செவிமடுப்பர்.
2.நிகழ்ச்சிகளின்போது இடையூறு விளைவிப்போரையும், விரும்பத்தகாத செயல்களையும் செய்பவர்களை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
3.விழாச்செயலாளர்களோ தன்னார்வலர்களோ போட்டியின்போது ஒருதலைப்பட்சமாக செயல்படுதல் கூடாது. விருப்பு வெறுப்புக்களை கடந்தவர்களே விழாக்குழு செயல்பாட்டாளர்களாக இருக்கவேண்டும். மீறுபவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு கண்டிப்புக்குள்ளாக்கப்படுதல் நேரிடும்.
4.விழாக்குழுவினரை வழிநடத்தி, போட்டிகளை நெறிப்படுத்தி விழாவினை சிறப்பாக நடத்துபவராக தலைவர்கள்/துணைத்தலைவர்கள் இருந்திடல் வேண்டும்.
5.தலைவர்கள் மனப்பக்குவமுள்ளவராக, சுயநலமற்றவராக, சமயோசித முடிவெடுப்பவராக ,இளைஞரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருபவராக, விழக்குழுவினை வழிநடத்தும் ஆளுமையுடையவாரக இருத்தல் வேண்டும்.
#####
நமது சுற்றுவட்டாரத்திலே நம் ஊரைப்போல் வேறெங்கும் இதுபோன்று சிறப்பாக பொங்கல் விழாக்களை கொண்டாடப்படுவதில்லை என்கிற பெருமைகளைகளையும்,ஊரின் ஒற்றுமையையும் வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துக்கூறி, பொங்கல் விழாவில் அவர்கள் காட்டும் ஆர்வங்களையும புரியும் சாதனைகளையும் கண்டு பெருமிதம் கொள்வோம்.
வாழ்க தலையால் நடந்தான் குளம்! வளர்க நம் ஒற்றுமை!!
கற்பி ! ஒன்றுசேர்!! புரட்சி செய்!!!
குறிப்பு: இவையனைத்தும் நமது ஊர் மக்கள் செயல்பாட்டு நெறியாளர் தெய்வத்திரு.சக்திவேல், ஊரின் நலவிரும்பி , இளைஞர்களின் முன்னோடி தெய்வத்திரு.சமுத்திரராஜ் அவர்களுக்கிடையேயான கடந்த ஆண்டு கலந்துரையாடலின் போது குறிப்பெடுக்கப்பட்டது.
விழாக்குழு:
1.அரசியல் பிரதிநிதிகள் விழாக்குழு உறுப்பினர் ஆகக்கூடாது (ஆகினாலும் விழாவில்/மேடையில் அரசியல் பேசக்கூடாது.
2.மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும்,அனுபவமிக்கவர்களையுமே விழாக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவராக இளைஞர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
3.ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆதரவு பெற்றவரே விழாக்குழுவின் செயலாளராகவும் , பொருளாளராகவும் தலைவரால் முன்மொழியப்படவேண்டும்.
4.ஓன்று (அ) ஒன்றுக்கு மேல் செயலாளர்களை (அதிகபட்சம் 4 பேர் ) தேர்வு செய்யவும் அவர்களின்கீழ் செயல்படவும் இளைஞர்களுக்கு முழு உரிமை உண்டு.
5.விரும்பும் தன்னார்வலர்கள் விழாக்குழுவுடன் இணைந்து பணியாற்ற முழு அனுமதி உண்டு.
6.நன்கொடைகள் அன்பளிப்புகள் பொருளாளரால் முறையாக கணக்கிடப்பட்ட வேண்டும். குளறுபடிகளோ, மக்கள் விரும்பினாலோ அல்லது சந்தேகம் எழும்பினாலோ கணக்கினை மக்களிடம் சமர்பிக்க கடைமையுள்ளவர் பொருளாளர்.
7..ஒலி-ஒளி , மற்றும் பந்தல் அமைப்பினை தேர்வு செய்வதில் விழாக்குழுவிற்கு முழு சுதந்திரம் உண்டு, தேவைப்பட்டால் நாட்டாமையிடம் ஆலோசனை கேட்கலாம்.
8.எந்தவொரு போட்டியினையும் நீக்கவோ, சேர்க்கவோ மாற்றி அமைக்கவோ விழாக்குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.
9. வெற்றி/தோல்வி சர்ச்சைகள் எழும்பட்சத்தில் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.
1௦. சிறப்பு விருந்தினர்களாக காவலர்களை அழைத்துக்கொள்ளவதற்கு நாட்டாமையுடன் விழாக்குழுவினரும் செல்லக்கடமைப்பட்டவர்கள்.
11. விழாக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மதுவருந்திவிட்டு செயல்படுவதாக தெரியவந்தால் அவர்களை நீக்க இளைஞர்களுக்கும், மக்களுக்கும் நேரடி உரிமை உண்டு.
போட்டி விதிகள்:
1.குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் குறைந்தது தலா 3 போட்டிகளாவது நடத்தப்பட வேண்டும்.
2.போட்டி அறிவித்து 5 நிமிடத்தில் இரண்டுக்கும் மேல் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளவில்லையென்றால் அந்த போட்டியை நீக்கவோ (அ) கலந்துகொண்டவர்களையே வெற்றியாளராக அறிவிக்கலாம்.
3.பெண்கள் பிரிவு போட்டிகளில் நமது ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணம் செய்துகொடுக்கப்பட்ட பெண்கள், வெளியூர்களில் இருந்து நமது ஊருக்கு வந்த மருமகள்கள் கலந்துகொள்ள முழு உரிமை உண்டு.
4.ஆண்கள் பிரிவு போட்டிகளில் நமது ஊர் இளைஞர்களும், நமது ஊர் மருமகன்களும்( நமது ஊருக்கு வரி கொடுப்பவராக இருக்க வேண்டும்) கலந்து கொள்ளலாம்.
5.குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள் பிரிவுகளில் மக்களுக்கு ஆட்சேபனைகளோ மனத்தாங்கலோ இல்லையென்றால் நமது வெளியூர் சொந்தங்களும் கலந்துகொள்ளலாம்.
6.பாட்டுப்போட்டிகளில் சினிமா பாடல்கள்/கட்சிப்பாடல்கள் அறவே கூடாது, ஜாதிப்பாடல்கள் தவிர்ப்பது நல்லது.
7.போட்டிகள் நடைபெறும் நேரத்தை சூழ்நிலைகளுக்கு தக்கவாறு மாற்றி அமைக்கலாம்.
8.எந்த போட்டிக்கும் பரிசு வழங்க விரும்புபவர்கள் அந்த போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே விழாக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
9.பரிசு வழங்குபவர்கள் தங்களுக்குள்ளான பரஸ்பர புரிதலுடன் போட்டிகளை மாற்றி பரிசுகளை வாங்கி வழங்கலாம்.
10.ஏதாவதொரு போட்டிக்கு பரிசு வழங்க பொறுப்பேற்றுவிட்டு கடைசி நேரத்தில் விலகுவது அறம்மல்ல, அவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலை சந்தர்ப்பதால் ஏற்படுமாயின் இரவு நிகழ்ச்சிக்கு 2 மணி நேரம் முன்னதாகவே விழாக்குழுவிடம் தெரிவிப்பது நலம்.
11. பெண்கள் சம்பந்தப்பட்ட போட்டிகளை சிறப்புடன் செயல்படுத்த பெண்களின் சார்பாக பெண் தன்னார்வலர்கள் விழக்குழுவுடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பாய் அமையும்.
பொது விதிகள் :
1.இளைஞர்களின் சம்மதங்களை ஏகமனதாக பெற்றவரே செயலாளராக செயல்படுவர், ஆதலால்தான் செயலாளரின் கருத்துக்கு இளைஞர்கள் செவிமடுப்பர்.
2.நிகழ்ச்சிகளின்போது இடையூறு விளைவிப்போரையும், விரும்பத்தகாத செயல்களையும் செய்பவர்களை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
3.விழாச்செயலாளர்களோ தன்னார்வலர்களோ போட்டியின்போது ஒருதலைப்பட்சமாக செயல்படுதல் கூடாது. விருப்பு வெறுப்புக்களை கடந்தவர்களே விழாக்குழு செயல்பாட்டாளர்களாக இருக்கவேண்டும். மீறுபவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு கண்டிப்புக்குள்ளாக்கப்படுதல் நேரிடும்.
4.விழாக்குழுவினரை வழிநடத்தி, போட்டிகளை நெறிப்படுத்தி விழாவினை சிறப்பாக நடத்துபவராக தலைவர்கள்/துணைத்தலைவர்கள் இருந்திடல் வேண்டும்.
5.தலைவர்கள் மனப்பக்குவமுள்ளவராக, சுயநலமற்றவராக, சமயோசித முடிவெடுப்பவராக ,இளைஞரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருபவராக, விழக்குழுவினை வழிநடத்தும் ஆளுமையுடையவாரக இருத்தல் வேண்டும்.
#####
நமது சுற்றுவட்டாரத்திலே நம் ஊரைப்போல் வேறெங்கும் இதுபோன்று சிறப்பாக பொங்கல் விழாக்களை கொண்டாடப்படுவதில்லை என்கிற பெருமைகளைகளையும்,ஊரின் ஒற்றுமையையும் வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துக்கூறி, பொங்கல் விழாவில் அவர்கள் காட்டும் ஆர்வங்களையும புரியும் சாதனைகளையும் கண்டு பெருமிதம் கொள்வோம்.
வாழ்க தலையால் நடந்தான் குளம்! வளர்க நம் ஒற்றுமை!!
கற்பி ! ஒன்றுசேர்!! புரட்சி செய்!!!